Wednesday, September 28, 2011

தத்துவம் என்றால் என்ன? தத்துவம் நமக்குத் தேவையா?

தத்துவம்
வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும், இடையூறுகளையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் தத்துவம் மனிதனுக்குத் தருகிறது. செயலூக்கத்துடன் இலட்சியத்தை நோக்கி முன்னேற அவனுக்கு உதவுகிறது. அத்தகைய தத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதே இப்பகுதியின் நோக்கம்.
பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாக விளங்குவது எது, பிரபஞ்சத்தின் இரகசியங்களையும், இயற்கையின் சக்திகளையும் மனிதனால் புரிந்து கொள்ள முடியுமா, முடியுமெனில் அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த மனித அறிவால் முடியுமா, பிரபஞ்சமும், மனித சமூகமும், மனிதனுடைய சிந்தனையும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னேறிச் செல்கிறதா, ஆம் எனில் அவ்விதிமுறைகள் யாவை, சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம் யாது, அவனுடைய இயல்பு யாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு விடைகாண வழிகாட்டுவதே தத்துவம் ஆகும். [.....]

No comments:

Post a Comment