Wednesday, September 28, 2011

நினைவில் நிற்கும் கவிதைகள்


எத்தனையோ கவிதைகளைப் படிக்கிறோம், ரசிக்கிறோம். ஆனால் அவற்றுள் சில கவிதைகள் மட்டும் நினைவைவிட்டு அகலாமல் நிலைத்து நிற்கின்றன. இயற்றிய கவிஞர் பெயர் மறந்து போனாலும் கவிதை நெஞ்சில் நிற்கும். வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அதன் வாசம் மனதில் வீசும். அப்படி என் மனதில் இடம்பிடித்த கவிதைகள் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுவேன். இணையத்தில் கண்டெடுத்த ஒரு கவிதை. படைப்பாளியின் பெயர் தெரியவில்லை.
அம்மா
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்.
‘குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே’
என்றான் அண்ணன்.
‘எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’
என்றாள் அக்கா.
‘சளி பிடிச்சிட்டு செலவு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா.
தன் முந்தனையால்
என் தலையைத் துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!

No comments:

Post a Comment