Friday, April 13, 2012

ஜீவன்முக்தி

பாரதியர் கவிதைகள்
ஜீவன்முக்தி 

ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த
ஜன்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு. (ஜய)

அனுபல்லவி


பயனுண்டு பக்தியி னாலே - நெஞ்சிற்

பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)

சரணங்கள்


புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி

பொற்பாத முண்டதன் மேலே
நியமமெல் லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. (ஜய)

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ

வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)

அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி

அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)

No comments:

Post a Comment