Wednesday, May 30, 2012

பொன்மொழிகள்

01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.

03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.

04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.

05. பிறப்போடு பிறந்தது மரணம்.

06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.

07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.

08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.

09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.

10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.

11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.

12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.

13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.

14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.

15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.

16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.

17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.

18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே

19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.

20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.

No comments:

Post a Comment