மரபுக் கவிதைகள்
தமிழ் யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, தொடக்க காலத்தில் ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அதுவே ’கவிதை’ என்றாகிப் போனது. யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆயிற்று. 1968-1978 ஆண்டுகளில் நான் எழுதிய மரபுக் கவிதைகள் சிலவற்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
புலரட்டும் புதுவாழ்வு!
கூப்பாடு போட்டிங்கே வெற்றி காணல்
கொக்குதலை வெண்ணெய்வைத்துப் பிடித்தல் போலாம்!
பூப்போட்டுப் பூஜித்து வாழ்ந்த தெல்லாம்
போதும்!இனி புதியதொரு உலகம் பூக்க
ஏற்பாடு செய்திடுக! ஆர்ப்ப ரித்தே
எழுந்துவிட்டால் எவரிங்கே எதிர்த்து நிற்பார்? [.....]
கொக்குதலை வெண்ணெய்வைத்துப் பிடித்தல் போலாம்!
பூப்போட்டுப் பூஜித்து வாழ்ந்த தெல்லாம்
போதும்!இனி புதியதொரு உலகம் பூக்க
ஏற்பாடு செய்திடுக! ஆர்ப்ப ரித்தே
எழுந்துவிட்டால் எவரிங்கே எதிர்த்து நிற்பார்? [.....]
நட்சத்திரங்களின் மரணத்தில் ஒரு ஞான விடியல்!
ஈர நினைவின் குளுமையிலே – ஓர்
இன்பக் கனவு மலர்கிறது!
தூர நிலவின் தனிமையிலே – அது
துன்ப நிழலாய் வளர்கிறது! [.....]
இன்பக் கனவு மலர்கிறது!
தூர நிலவின் தனிமையிலே – அது
துன்ப நிழலாய் வளர்கிறது! [.....]
காரணத்தோடு நான் சிரிப்பேன்!
வானத்தில் ஒருநாள் மேகங்கள் மாறும்
வாழ்க்கையில் அதுபோல் துயரங்கள் தீரும் – அந்தக்
காலத்தில் என்றன்
காவியம் யாவும்
ஆனந்தத்தோடு அரங்கேறும்! [.....]
வாழ்க்கையில் அதுபோல் துயரங்கள் தீரும் – அந்தக்
காலத்தில் என்றன்
காவியம் யாவும்
ஆனந்தத்தோடு அரங்கேறும்! [.....]
சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்...
பெருமூச்சின் இளஞ்சூட்டில் – யுகப்
பிரளயத்தைப் பிரசவிப்பார்!
திருநாட்டின் வீதிகளில் – வசந்த
தேரோட்டம் நடத்திவைப்பார்! [.....]
பிரளயத்தைப் பிரசவிப்பார்!
திருநாட்டின் வீதிகளில் – வசந்த
தேரோட்டம் நடத்திவைப்பார்! [.....]
இந்தப் பாவிமகன் சாகும்வரை...
மனக்கோயில் வாசலிலே வரைந்த கோலம்!
வாட்டங்கள் தீர்த்துவைத்த வசந்த காலம்!
பனிக்கால வைகரையின் பரவ சங்கள்
பவனிவரும் மழலைமுகம் பவழத் திங்கள்! [.....]
வாட்டங்கள் தீர்த்துவைத்த வசந்த காலம்!
பனிக்கால வைகரையின் பரவ சங்கள்
பவனிவரும் மழலைமுகம் பவழத் திங்கள்! [.....]
No comments:
Post a Comment