Friday, April 8, 2011

பழமொழிகள்

  1. ஆசை வெட்கம் அறியாது .
  2. உள்ளங்கை நெல்லிக்கனி போல.
  3. அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது.
  4. ஓட்டை சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
  5. யானைக்கும் அடி சறுக்கும்.
  6. அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
  7. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவார்களா?.
  8. அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா?.
  9. அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.
  10. அலை மோதும்போதே தலை முழுகு.
  11. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
  12. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  13. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் (விஷம்) நஞ்சாகும்.
  14. கிடைக்கபோகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
  15. ஆபத்துக்கு பாவம் இல்லை.
  16. ஆழமறியாமல் காலை விடாதே.
  17. ஆனைக்கும் பானைக்கும் சரி.
  18. ஆணை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
  19. இக்கரைக்கு அக்கறை பச்சை.
  20. இனம் இனத்தை சேரும்.
  21. எரிகிற கொள்ளியில் என்னை ஊற்றினால்போல.
  22. எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம்.
  23. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே.
  24. பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே.
  25. எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
  26. ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
  27. கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது.
  28. கடைத்தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே.
  29. கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
  30. கழுதை அறியுமா கற்பூர வாசனை?.
  31. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  32. சர்க்கரை என்றால் தித்திக்குமா.
  33. தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்காதே.
  34. தான் ஆடாவிட்டாலும் தன தசை ஆடும்.
  35. தானொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
  36. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  37. பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.
  38. பதறிய காரியம் சிதறி போகும்.
  39. பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
  40. பழகப்பழகப் பாலும் புலிக்கும்; கிட்ட இருந்தால் முட்டப்பகை.
  41. பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி.
  42. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  43. பொறுத்தார் பூமி ஆள்வார்.
  44. மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.
  45. மாறி அல்லாது காரியம் இல்லை.
  46. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  47. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா.
  48. வெளுத்ததெல்லாம் பாலமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
  49. வெள்ளம் வரும்முன்னே அணைகோல வேண்டும்.
  50. வெறுங்கை முழம் போடுமா?
  51. வேண்டாப் பொண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம்.
  52. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி?.
  53. ஏரி வெட்டியும் கெட்டது வெட்டாமலும் கெட்டது.
  54. பணம் பெருத்தா ....பறச்சேரியில் போடு....
  55. வெள்ளிக்குப் போடுறதும், வேசிக்குப் போடுறதும் ஒண்ணு ....
  56. கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
  57. அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  58. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
  59. தூர்ந்த கிணற்றைத் தூர்வார்காதே
  60. தலையை தடவி மூளையை உரிவான்
  61. இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
  62. கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?
  63. ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்
  64. இரண்டு பொண்சாதிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு ?
  65. சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
  66. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது
  67. எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்
  68. காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
  69. உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
  70. சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
  71. கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
  72. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
  73. கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
  74. பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
  75. வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .
  76. கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
  77. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
  78. குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
  79. பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்.
  80. தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்.
  81. சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .
  82. பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !.
  83. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
  84. ஆற்றிலே போகுது தண்ணீரை , அப்பா குடி , ஆத்தாள் குடி.
  85. மதில் மேல் பூனை போல .
  86. பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை .
  87. தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் .
  88. அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?
  89. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்.
  90. கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்.
  91. ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள்..
  92. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
  93. பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
  94. உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய் .
  95. வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன ?
  96. பொங்கின பால் பொய்ப்பால்.
  97. அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன் .
  98. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ?
  99. ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
  100. பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.

No comments:

Post a Comment